மயிலாடுதுறை அருகே செப்டிக் டேங்கில் விழுந்த பசுமாடு மீட்பு

மயிலாடுதுறை அருகே வழுவூரில் செப்டிக் டேங்கில் பசுமாடு விழுந்ததை தீயணைப்பு தூறையினர் உயிருடன் மீட்டனர்

Update: 2023-11-27 16:16 GMT

மீட்கப்ட்ட பசுமாடு


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மயிலாடுதுறை அருகே வழுவூர் நெய்க்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி, கலியமூர்த்தி. இவரது வீட்டின் செப்டிக் டேங்கில், அதே பகுதியில் வசிக்கும், ராஜ்குமார் என்பவரது பசுமாடு, இன்று  காலை மேய்ச்சலுக்கு சென்றபோது, தவறி விழுந்தது. பசுவின் அலறல் சத்தம் கேட்டவர்கள் , ‍‍‍உடனடியாக மயிலாடுதுறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, நிலைய அலுவலர் ரமேஷ், தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், சுமார் ,அரை மணி நேரம் போராடி, பசுமாட்டினை பத்திரமாக மீட்டனர்.

Tags:    

Similar News