கந்திலி அருகே கிணற்றில் தவறி விழுந்த சினை பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்!

கிணற்றில் தவறி விழுந்த பசு மாடுமீட்பு!

Update: 2023-12-17 10:58 GMT

கிணற்றில் தவறி விழுந்த பசு மாடுமீட்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த அரவ மட்டறப்பள்ளி அருகே உள்ள கொல்லக்கொட்டாய் பகுதியை சார்ந்தவர் விவசாயி கண்ணாயிரம் இவருடைய விவசாய நிலத்தில் இவருக்கு சொந்தமாக 50 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது இந்த நிலத்தின் அருகே இவருக்கு சொந்தமான சினை பசு மாட்டை மேய்த்துக் கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் பசு மாடு விழுந்தது. இதனால் திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு கண்ணாயிரம் தகவல் தெரிவித்தார் பின்னர் விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறை வீரர்கள் உடனடியாக சினைபசுமாட்டை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது
Tags:    

Similar News