கோட்டாரில் லாட்டரி சீட்டுகள் விற்பனை

கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு பகுதியில் சட்டவிரோத லாட்டரி விற்பனையில் ஈடுப்பட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-01-29 08:06 GMT
கைது

குமரி மாவட்டம், நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு பகுதியில் சட்டவிரோத லாட்டரி விற்பனையில் ஈடுப்பட்டவரை காவல்துறையினர் கைது செய்தனர். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆஷா ஜவகர் கோட்டார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்து கல்லூரி அருகே அனாதைமடம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகர், மேற்கு தெருவை சேர்ந்த முருகேசன் மகன் மோகனசுதன் (24) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டார்.

ஏ சி மெக்கானிக்கான மோகனசுதன் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 8லாட்டரி சீட்டுகளை பரவுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி விற்ற பணம் ரூபாய் 7 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News