சேலம் அதிமுக பகுதி செயலாளர் கொலை வழக்கு: 7பேர் கைது

சேலம் அதிமுக பகுதி செயலாளர் கொலை வழக்கு தொடர்பாக திமுக கவுன்சிலரின் கணவர் சதீஷ் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-07-04 14:44 GMT

கொலை செய்யப்பட்டவர் 

சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதி செயலாளர் சண்முகம் நேற்று இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார் . இந்த கொலையில் துப்பு துலங்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி 5 தனி படை அமைத்துள்ளார்.

இதில் சேலம் மாநகர துணை கமிஷனர் மதிவாணன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஈடுபட்டு விசாரணை செய்து வருகிறார்கள். இந்த கொலை வழக்கு தொடர்பாக தற்போது திமுக கவுன்சிலர் தனலட்சுமி கணவர் சதீஷ், உட்பட அருண்குமார், முருகன், பாபு, மாது, சீனி, செல்வம் ஆகிய ஏழு பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அதிமுக பகுதி செயலாளர் கொலை வழக்கில் திமுக கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News