சேலம் திமுக வேட்பாளர் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தம்

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வகணபதி வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

Update: 2024-03-28 07:38 GMT

செல்வகணபதி

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் பிருந்தா தேவி தலைமையில் இன்று நடந்தது. இதில் திமுக வேட்பாளர் செல்வகணபதி போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று பரிசீலனைக்கு வந்தபோது செல்வ கணபதிக்கு வடக்கு, தொகுதியிலும் மேற்கு தொகுதியிலும் இரட்டை வாக்குரிமை உள்ளதாகவும், அவர் மீது உள்ள வழக்கு குறித்த விவரங்கள் தெரிவிக்கவில்லை எனவும் புகார் எழுப்பப்பட்டது. இதனை அடுத்து செல்வகணபதி வேட்பு மனுவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கபடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News