மணல் கடத்தியவர் கைது!

செய்யாறு அருகே மணல் கடத்தி வந்த ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-15 12:20 GMT

கோப்பு படம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் (வயது 42)ஆட்டோவில் மணல் மூட்டைகளை கடத்தி வந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தூசி காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் மணல் மூட்டைகளுடன் ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News