புதிய காவல் ஆய்வாளருக்கு எஸ்டிபிஐ கட்சியினர் வரவேற்பு

சுத்தமல்லி காவல் நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் ஆய்வாளர் கவிதாவை எஸ்டிபிஐ கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

Update: 2024-03-05 07:28 GMT

வாழ்த்து தெரிவித்த எஸ்டிபிஐ கட்சியினர் 

நெல்லை மாவட்டம் மானூர் தெற்கு ஒன்றியம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் ஆய்வாளர் கவிதாவை நேற்று எஸ்டிபிஐ கட்சியினர் பொன்னாடை வழங்கி வரவேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு மானூர் தெற்கு ஒன்றிய தலைவர் ஷேக் முகமது பயாஸ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் நெல்லை தொகுதி செயற்குழு உறுப்பினர் இலியாஸ், ஒன்றிய செயலாளர் ஜாகிர் உசேன், கிளை தலைவர் ரசாக்,செயலாளர் அபு உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News