வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு
திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு இரும்பு வைப்பு அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்து சீல் வைக்கப்பட்டது.;
Update: 2024-04-20 10:12 GMT
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரப்பெற்றது.அதனை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தி.மலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு இரும்பு வைப்பு அறையில் வைத்து இன்று (20.04.2024) சீல் வைக்கப்பட்டது. அப்போது திருவண்ணாமலை தொகுதி பாராளுமன்றத் தேர்தல் பொது மேற்பார்வையாளர் திரு. மகாவீர் பிரசாத் மீனா மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.