வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு !

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சியை தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-04-17 10:54 GMT

இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு 

தூத்துக்குடி பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் வாக்குப் பதிவு வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு எட்டயபுரம் சி.கே.டி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

இப்பயிற்சியை தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தபால் வாக்கு வழங்குவதற்கும், வழங்கப்பட்டுள்ள தபால் வாக்குகளை மீண்டும் செலுத்துவதற்கும் ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வசதி மையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News