பழனியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

பழனியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-04 16:08 GMT

கடைகள் அடைக்கப்பட்டுள்ளன

பழனியில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம் நடத்தினர்.

பழனி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் குழு அமைத்துள்ளது. இந்நிலையில் அடிவாரம் சாலையோர வியாபாரிகள் கடைகளை அடைத்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர் .

பல ஆண்டுகளாக சாலையோரம் வியாபாரத்தை நம்பியே வாழ்க்கை நடத்திவரும் நிலையில் நீதிமன்றம் தங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தங்களுக்கு சாலையோரம் இடம் ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருநூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து பழனி நகர் முழுவதும் பந்து நடத்துவது போல அமைதியாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Tags:    

Similar News