மேம்பால பணிகளால் சர்வீஸ் சாலையில் அதிகரிக்கும் கடைகள்

Update: 2023-11-17 04:59 GMT
புதிதாக முளைத்துள்ள கடைகள் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் இல்லாததால், அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதே போல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் , பொதுமக்கள் சாலையை கடக்கும் பகுதியாக கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் பகுதி உள்ளது. தட்டான்குட்டை, வேமன்காட்டுவலசு, சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர், உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த பகுதியில்தான் சாலையை கடந்து வருகிறார்கள். இந்த இடத்தின் அத்தியாவசியம் கருதி உடனே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில், பல ஆண்டுகளுக்கு பின் மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. மேம்பால கட்டுமான பணிகள் நடந்து வருவதால், சர்வீஸ் சாலையில் டீ கடை, டிபன் கடை, கருப்பு சாறு கடை, சில்லி சிக்கன் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உருவாகி வருகிறது. சர்வீஸ் சாலையோரம் வெறுமனே இருந்த இடங்களில் தற்போது மண் கொட்டப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News