நாமக்கல் அருகே நாளை மெளன போராட்டம்

நாமக்கல் அருகே சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நாளை மௌன போராட்டம்.

Update: 2024-02-17 09:15 GMT

நாமக்கல் அருகே நாளை மெளன போராட்டம்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் வலையப்பட்டி , புதுப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அமையவிருக்கும் சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்றன. இதுகுறித்து சிப்காட் எதிர்ப்பு குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; எங்களது 53வது அறப் போராட்டமாக சிப்காட் எதிர்ப்பு இயக்க அலுவலகத்தில், தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், நாளை 18-02-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி இரவு 8 மணி வரை நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், வளையப்பட்டி நா.புதுப்பட்டி, பரளி , அரூர் பகுதிகளில் சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மௌன போராட்டம், வளையப்பட்டி- மோகனூர் சாலையில் சிப்காட் எதிர்ப்பு இயக்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அது சமயம் பொதுமக்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெருந்திரளாய் கலந்து கொள்ள வேண்டுமாய் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News