ஸ்ரீ பாலசுப்ரமணியம் திருக்கோவிலில் சிறப்பு பூஜை

அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணியம் திருக்கோவிலில் ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Update: 2024-07-03 02:43 GMT

ஸ்ரீ பாலசுப்ரமணியம் திருக்கோவிலில் சிறப்பு பூஜை

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் அருகே காஞ்சி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணியம் திருக்கோவிலில் ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காஞ்சி சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்களும், பக்தர்களும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News