தீபாவளியன்று சிறப்பு காட்சி - தியேட்டருக்கு நோட்டீஸ்

Update: 2023-11-14 07:50 GMT

அதிகாரிகள் விசாரணை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் யூனியன் மெயின் ரோட்டில் பிரபல தியேட்டர் ஒன்று உள்ளது. இங்குத் தீபாவளி அன்று அனுமதி இல்லாமல் சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரனுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில் வடக்கு தாசில்தார் மகேஸ்வரர், வருவாய் அதிகாரி தேவி, கிராம நிர்வாக அதிகாரி விஜயராஜ் ஆகியோர் தியேட்டரில்  அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக காலை 7.10, 7.25, 8.10, 8.25, என ஆறு காட்சிகள் வெளியிட்டு இருப்பது தெரியவந்தது. விசாரணைக்கு பின் இது தொடர்பான அறிக்கையை திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு தாசில்தார் அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு அனுமதித்த நேரத்துக்கு முன்பாக திரையிடப்பட்டதுக்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு தியேட்டரில் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது அந்த விளக்கத்தின் அடிப்படையில் தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது
Tags:    

Similar News