மாநில அளவிலான கராத்தே - மாணவ,மாணவிகள் உற்சாகமாக பங்கேற்பு

கரூரில் நடைபெற்ற 9-வது மாநில அளவிலான கராத்தே போட்டியில் மாணவ- மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர்.

Update: 2023-11-05 08:34 GMT
கராத்தே போட்டி 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கரூர் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் ஒன்பதாவது மாநில அளவிலான இன்டர்நேஷனல் கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கரூர், திருச்சி ,திண்டுக்கல், சேலம், திருப்பூர், மதுரை, தேனி,உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை சேர்ந்த 4- வயது முதல் 14- வயதுடைய மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் ஏர் ஃபைட் எனப்படும் கட்டா, அடிப்படை பயிற்சியான கிகான்ஸ் முறையில் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற மாணவ- மாணவிகள் பரிசு பெறும் முனைப்புடன் தங்களது திறன்களை வெளிப்படுத்தினர். போட்டிகள் பிராஞ்ச் இந்தியா ஹெட் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.

Tags:    

Similar News