பூலாம்பட்டியில் மாநில அளவிலான கராத்தே போட்டி

பூலாம்பட்டியில் மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Update: 2023-10-20 15:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாடு கியோ குவின் சின்னூ"ஸ் கராத்தே அசோசியேஷன், டாக்டர் சென்சாய் சின்னுசாமி அவர்களின் மாணவர்கள் கலந்து கொண்டு முதல் பரிசினை தனுஷ்யா,ஷர்மியா,ஹிரிஷ்வா,ஜெய் தேவ், இரண்டாம் பரிசினை சூர்யா, தன்ஷிகா,பாரிவேந்தன் மற்றும் மூன்றாம் பரிசினை பிரணிதா சரவணேஷ் ஆகியோர் வென்று சாதனை படைத்தனர்.

தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பூலாம்பட்டியில் பாராட்டு விழா கராத்தே பள்ளியில் நடைபெற்றது.

இவ்விழாவில் அதிமுக எடப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ், பா.ம.க, சேலம் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடாசலம், பூலாம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் அமிர்தலிங்கம், பூலாம்பட்டி அதிமுக தொழில்நுட்ப அணி வசந்தகுமார், கராத்தே மாநில தலைமை பயிற்சியாளர் டாக்டர் சென்சாய் சின்னசாமி, துணை பயிற்சியாளர்கள் ரமேஷ், ரஞ்சித்குமார் மற்றும் அசோசியேசன் அறிவுரையாளர் மஞ்சுநாதன் ஆகியோர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களை வாழ்த்தி பாராட்டினர்.

Tags:    

Similar News