அரசு பஸ் மீது கல்வீச்சு: கண்ணாடி சேதம்!

ஆறுமுகநேரி அருகே அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீசியதில் பின்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து சேதம் அடைந்தது. 

Update: 2024-02-15 09:14 GMT

சேதமடைந்த பேருந்து 

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் அரசு பஸ் இன்று காலை காயல்பட்டினத்தை கடந்து ஆறுமுகநேரியை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேயன்விளை பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் அந்த பஸ் மெதுவாக சென்றது.  அப்போது மர்ம நபர் பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கல்லை வீசியதாக கூறப்படுகிறது. இதில் கண்ணாடி முழுவதுமாக உடைந்து சேதம் அடைந்தது. இதுபற்றி அந்த பஸ் கண்டக்டர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News