மாணவர் காவல் படை துவக்க விழா
பண்ருட்டியில் மாணவர் காவல் படை துவக்க விழா நடந்தது.
Update: 2024-03-07 01:00 GMT
பண்ருட்டி காவல் நிலையம் சார்பில் பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர் காவல் படை துவக்க விழா துவங்கப்பட்டது. நிகழ்ச்சியின் துவக்கமாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேமலதா தலைமையேற்று வழி நடத்தினார். சிறப்பு விருந்தினர்களாக பண்ருட்டி துணை கண்காணிப்பாளர் பழனி வருகை புரிந்து மாணவர் காவல் படை துவக்க விழாவை இனிதே குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.