மேட்டுப்பாளையத்தில் நான்காவது குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நான்காவது குடிநீர் திட்டம் நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-03 09:39 GMT

அதிகாரிகள் ஆய்வு 

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்ஜிகிரியப்பனவர் கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், பவானி ஆற்றில் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட்டு வரும் திருப்பூர் மாநகராட்சியின் நான்காவது குடிநீர் திட்டம் நீரேற்று நிலையத்திற்கு ரூ.24.54 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் திட்ட மேலாண்மை குழு (பி எம் சி)சரவணன், இளநிலை பொறியாளர் கோவிந்த பிரபாகர், பி எம் சி கட்டுமான மேலாளர் செல்வம் உட்பட பலர் உள்ளனர்.

Tags:    

Similar News