தக்கலையில் தமுஎகச கூட்டம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க குமரிமாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஜெயகாந்தன் தலைமையில் தக்கலை இஎம்எஸ் நினைவகத்தில் நடைபெற்றது.

Update: 2023-10-29 09:08 GMT

தக்கலையில் நடந்த தமுஎகச கூட்டம்



இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க குமரிமாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஜெயகாந்தன் தலைமையில் தக்கலை இஎம்எஸ் நினைவகத்தில் நடைபெற்றது. மாநில செயலாளர் ஆதவன்தீட்சண்யா,மாவட்ட செயலாளர் ஹசன், பொருளாளர் அருள்மனோ மற்றும் மிகைலான், இருதயராஜ்,ஹலிமா, சுந்தரம், சாந்தகுமார் , றாபர்ட், டயானா , ரெஜிமோள்,சுரேஷ், வினோத், சுஜாமி, றோஸ்றாபின்,உதயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு பதினெட்டு தொழில்களை உள்ளடக்கி குலக்கல்வி திட்டத்தை அமுல்படுத்தி பின்தங்கிய மக்களின் கல்வியை பறிக்கும் செயலை கண்டித்தும் , தமிழ்ஒளி நூற்றாண்டு நிகழ்வை கொண்டாடுவது. நவம்பர் ஒன்று மாலை மூன்றுமணிக்கு மார்த்தாண்டம் நினைவு ஸ்தூபிமுன் மொழிவளி மாநிலம் உருவானதின உறுதியேர்ப்பு நடத்துவது.நவம்பர் 25ல் நவோதனம் நாடகம் நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News