தருமபுரி அருகே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது

தருமபுரி அருகே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-28 13:01 GMT

காவல் நிலையம்

தர்மபுரி அருகே ஆட்டுகாரன்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் சரவணன் மீது 26ம் தேதி தர்மபுரி நகர காவல் நிலையத்தில் 17 வயது சிறுமி. ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தபோது அங்கு பணிபுரிந்த ஆசிரியர்,

சரவணன் என்பவர்,தனக்கு தந்தை இல்லாததால் தன்னை படிக்க வைப்பதாக கூறி தர்மபுரியில் உள்ள ஒரு அரசு(நகராட்சி) பள்ளியில் ஒன்பதாம் வகுப்புசேர்ந்ததாகவும் தனக்கு சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி வீட்டிற்கு வர சொல்லி கடந்த 20.06.2021 ம் தேதி தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாகவும்,

பின்னர் (அவ்வையார்) அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை தன்னிடம் அவ்வாறு நடந்து கொண்டுள்ளதாகவும்,யாரையும் திருமணம் செய்யக்கூடாது என்றும் கூறி கடந்த 10.05.2024ம் தேதி தன்னை மிரட்டி அடித்து விட்டதாகவும் ஆசிரியர் சரவணன் மீது சிறுமி புகார் மனு அளித்தார்.

இந்த மனு மீது தர்மபுரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளபட்டு தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ பிரிவின் கீழ் ஆசிரியர் சரவணன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News