செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது

கோட்டகுப்பம் அருகே செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-06-09 13:41 GMT

கைதானவர் 

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடியைச் சேர்ந்தவர் வினோத், 27; நேற்று பெரிய முதலியார் சாவடியில் இருந்து ஆரோவில் போகும் சாலை ஓரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு மொபைல் போன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருண், 24; என்பவர் பைக்கில் வந்து வினோத் பேசி கொண்டிருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார்.
இதுகுறித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து அருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News