ராசிபுரம் நகராட்சி பகுதியில் திமுக எம்பி மாதேஸ்வரன் நன்றி

ராசிபுரம் நகராட்சி பகுதியில் திமுக எம்பி மாதேஸ்வரன் நன்றி கூறினார்.

Update: 2024-07-05 16:07 GMT

நன்றி தெரிவித்த எம்பி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பகுதியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக எம்பி வி.எஸ்.மாதேஸ்வரன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக வி.எஸ். மாதேஸ்வரன் போட்டியிட்டு திமுக எம்பி ஆக வெற்றி பெற்றார்.

இதனை அடுத்து அவர் ஒவ்வொரு பகுதியாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வகையில் ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டு பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு அளித்த பொது மக்களுக்கு நன்றியை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு திமுக நகர கழக செயலாளர் என்.ஆர். சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு எம்பி மாதேஸ்வரன் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள்,

மாநில நிர்வாகி சந்திரசேகர், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News