ஆதீனத்தில் யானை குடியிருக்கப்போகும் புதுவீட்டை மடாதிபதி திறந்து வைப்பு

மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனத்திற்கு நிரந்தரமாக வரவுள்ள லக்கிமணி பெண் யானைக்காக கட்டப்பட்டுள்ள யானை கொட்டகையை 27வது ஆதீனம் திறந்து வைத்தார்.

Update: 2024-05-20 16:20 GMT

மடாதிபதி திறந்து வைத்த கூடாரம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் ஆதீனகர்த்தரின் பட்டணபிரவேசவிழா ஶ்ரீஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த விழாவிற்காக வனத்துறையிடம் 15 நாள் அனுமதி பெற்று 34 வயதுடைய லக்கிமணி என்ற பெண் யானை வரவழைக்கப்பட்டது.

இந்த யானையை தருமபுர ஆதீனம் தானமாக பெறவுள்ள நிலையில் கருங்கல் தளம். மற்றும் மண்தளம் அமைக்கப்பட்டு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் யானை கொட்டகை கட்டப்பட்டு திறப்புவிழா நடைபெற்றது. தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்து பழங்கள்,

காய்கறிகள் குளிர்ச்சிதரும் தர்பூசனி ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து யானையுடன் நின்று தருமபுர ஆதீனம் மற்றும் பக்தர்கள் ஆசி பெற்று புகைப்படம் எடுத்துகொண்டனர். முன்னதாக ஶ்ரீஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் சிறப்பு பூஜைகள் செய்தபோது தருமபுரம் ஆதீன வேத சிவாகம பாடசாலை ஆசிரியர்,

மற்றும் மாணவர்கள் பாடிய கணபதி தாளம், மந்திரங்களுக்கும் மேளதாள வாத்தியங்களுக்கு ஏற்றவாறு யானை தன் தலையை ஆட்டி நடனமாடியது தருமபுர ஆதீனத்தையும் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

Tags:    

Similar News