கத்திமுனையில் வழிப்பறி செய்த ரவுடி சிறையில் அடைப்பு

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கத்திமுனையில் வழிப்பறி செய்த ரவுடி சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2024-02-06 10:30 GMT
பைல் படம்

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே ஒதியத்தூரைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (27). தனியார் பைனான்ஸ் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர் பணம் வசூலுக்கு புனல்வாசல் பகுதிக்கு டூவீலரில் சென்றார். அப்போது அங்கு நடுரோட்டில் சிவக்குமார் (27) என்பவர் பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டி கொண்டிருந்தார்.

இதை பார்த்த சாந்தகுமார் தட்டிக்கேட்டார். அவரை சிவக்குமார் கத்திமுனையில் மிரட்டி தாக்கினார். தொடர்ந்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் வசூல் பணத்தை பறித்தார். இதுதொடர்பாக கெங்கவல்லி போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புனல்வாசல் ஏரிக்கரையில் இருந்தசிவக்குமாரை பிடித்து கைது செய்கனர்.

Tags:    

Similar News