வீட்டின் பூட்டை உடைத்து 62 பவுன் நகை திருட்டு!

கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 62 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

Update: 2023-12-02 09:49 GMT

theft

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி ஊராட்சி மூக்கரை விநாயகா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரமோகன் (62). இவா் மற்றும் இவரது மனைவி இருவரும், கடந்த நவ. 27 ஆம் தேதி, தேனியில் தனியாா் வங்கியில் பணியாற்றும் மகனைப் பாா்ப்பதற்காக சென்றனா். இந்த நிலையில் சந்திரமோகனின் வீட்டில் தோட்ட வேலை பாா்க்கும் நபா் வெள்ளிக்கிழமை வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்துள்ளாா். அதுகுறித்து சந்திரமோகனுக்கு தகவல் தெரிவித்தாா். அதனையடுத்து, சந்திரமோகன், அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேரும் தேனியில் இருந்து வந்து பாா்த்தபோது, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து கல் நெக்லஸ், தங்க செயின், கல் வளையல், கை செயின்,மோதிரம் உள்பட 62 பவுன் நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த கிழக்கு காவல் நிலையப் போலீஸாா், திருட்டு நிகழ்ந்த வீட்டில் விசாரணை நடத்தினா். மேலும் சந்திரமோகன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Tags:    

Similar News