திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி - மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

தமிழ் வளர்ச்சிதுறை சார்ப்பில் நடைபெற் உள்ள 1330 குறட்பாக்களை ஒப்புவிக்கும் திறன் பெற்ற மாணவர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்

Update: 2023-12-29 02:03 GMT

திருக்குறல் ஒப்புவிக்கும் போட்டியில் மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் 1330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்ற பள்ளி மாணவர்கள் இருப்பின் இப்போட்டியில் பங்கேற்கலாம் . ஏற்கனவே இந்த போட்டியில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் இந்த போட்டியில் பங்கேற்க கூடாது. போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்திலோ இலவசமாக பதிவிறக்கம் செய்து வரும் பத்தாம் தேதி மாலைக்குள் விண்ணப்பம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News