எலப்பாக்கத்தில் முப்பெரும் விழா

Update: 2023-12-21 11:29 GMT
எலப்பாக்கத்தில் முப்பெரும் விழா
மதுராந்தகம் அடுத்த எலப்பாக்கம் ரூரல் ஸ்டாா் தொண்டு நிறுவனத்தின் 21-ஆம் ஆண்டு நிறைவு விழா, நல உதவிகள் வழங்கல் மற்றும் கிறிஸ்துமஸ் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு எலப்பாக்கம் பங்குத்தந்தை ஜேக்கப் தலைமை வகித்தாா். ரூரல் ஸ்டாா் தொண்டு நிறுவன இயக்குநா் ஏ.டோமினிக் வரவேற்றாா். எலப்பாக்கம் ஊராட்சித் தலைவா் ஆதிலட்சுமி கோவிந்தன் முன்னிலை வகித்தாா். இதில், கே.மரகதம் குமரவேல் எம்எல்ஏ கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு நல உதவிகளையும், சாதனை புரிந்தவா்களுக்கு சாதனையாளா் விருதுகளையும் வழங்கினாா். எலப்பாக்கம் அருட்சகோதரி பிரேமா, இந்திய தேசிய சாதனையாளா்கள் கூட்டமைப்பு நிறுவன தலைவா் எல்.ராஜேந்திரன், மாவட்ட சிறுபான்மை நலக்குழு உறுப்பினா் ஏ.சி.குமாா், ஊராட்சித் தலைவா்கள் கிருஷ்ணமூா்த்தி (மோகல்வாடி), ப.விஜயகுமாா் (வெள்ளபுத்தூா்), சென்னை ரியல் அறக்கட்டளை இயக்குநா் எஸ்.லாரன்ஸ், ரூரல் ஸ்டாா் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் எஸ்.சுனில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Tags:    

Similar News