ஒரே குடும்பத்தை மூவர் விஷம் அருந்தி தற்கொலை-போலீசார் விசாரணை

கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-02-24 06:53 GMT

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை 

கவுண்டம்பாளையம் ஜவகர் நகர் பகுதியை சேர்ந்தவர் கனேசன்(65).தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மேற்கண்ட விலாசத்தில் மனைவி விமலா(56)வுடன் வசித்து வருகிறார்.இவரது மகள் தியாகாய்த்திரி(25) கடந்த வருடம் தீக்‌ஷித் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

தியா காய்திரி பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தியாகாய்த்திரி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு கணேசன் தனது உறவினரான கேரள மாநிலம் பாலகாட்டை சேர்ந்த அணில்குமார் என்பவருடன் பேசி உள்ளார்.

இதன் பின்னர் அணில்குமார் கணேசனை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் அவரை தொடர் கொள்ள முடியாத காரணத்தால் நேற்று இரவு கோவை வந்துள்ளார்.

வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதை கண்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூவரும் படுக்கை அறையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதனை தொடர்ந்து அணில்குமார் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கவுண்டம்பாளையம் போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News