தர்மபுரியில் தக்காளி விலை உயர்வு

தொடர்ந்து பொழிந்து வரும் கனமழையால் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்ந்துள்ளது.

Update: 2024-05-20 02:03 GMT

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது கோடை மழை பொழிந்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையின் காரணமாக அத்தியாவசிய காய்கறிகளின் உற்பத்தி மற்றும் சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தக்காளியின் விலை கிலோ 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தொடர் மழையால் தக்காளி உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு தக்காளி விலை நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகின்றது கடந்த வாரம் கிலோ தக்காளி 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி 28 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து மழை நீடித்தால் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News