சேலம் மாநகராட்சி பணியாளர்கள் இடமாற்றம்

சேலம் மாநகராட்சி பணியாளர்கள் இடமாற்றம்

Update: 2023-12-15 03:32 GMT

சேலம் மாநகராட்சி பணியாளர்கள் இடமாற்றம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாநகராட்சி மைய அலுவலகம், மண்டல அலுவலகத்தில் பணிபுரியும், உதவி வருவாய் அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்களில் பலரும் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி புரிந்தனர். இதனால் புகார்கள் எழுந்ததால், நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்களை இடமாற்றம் செய்து, கமிஷனர் பாலச்சந்தர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலக உதவி வருவாய் அலுவலர் முருகேசன், சூரமங்கலம் மண்டல அலுவலகத்துக்கும், அங்கு பணிபுரியும் கண்காணிப்பாளர் குழந்தைவேல், அஸ்தம்பட்டி மண்டலத்துக்கும்,அங்கு பணிபுரியும் கண்காணிப்பாளர் சேகர், அம்மாபேட்டைக்கும், மைய அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் மாதவன், கொண்டலாம்பட்டிக்கும் மாற்றப்பட்டனர். அஸ்தம்பட்டி உதவி வருவாய் அலுவலர் சுரேஷ்குமார், மேயரின் நேர்முக உதவியாளராகவும், மைய அலுவலக கணக்கு பிரிவு கண்காணிப்பாளர் ராணி, அம்மாபேட்டை மண்டல அலுலகத்துக்கும் மாற்றப்பட்டனர். வருவாய் ஆய்வாளர்கள் தமிழ்மணி, வீரக்குமார், சுரேஷ், சங்கர், சீனிவாசன், மாதேஸ்வரன் ஆகியோரும், உதவியாளர்கள் ரமேஷ், செல்வகுமார், அண்ணாதுரை ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News