17 வயது பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு செய்த திருநங்கை அருந்ததி போக்சோவில் கைது

17 வயது பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு செய்த திருநங்கை அருந்ததி போக்சோவில் கைது

Update: 2024-07-23 13:42 GMT

17 வயது பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு செய்த திருநங்கை அருந்ததி போக்சோவில் கைது 

திருச்செங்கோடு ஜுலை 24 –

17 வயது பள்ளி மாணவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்து கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியதாக மாணவன் 1098 என்ற எண்ணில் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சௌண்டேஸ்வரி விசாரணையின் பேரில் குமாரபாளையம் சுள்ளி மலைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 52 வயது திருநங்கை அருந்ததி என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுள்ளிமலை தோட்டம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வீட்டிற்கு அருகில் உள்ள மளிகைக் கடைக்கு குளிர்பானம் வாங்க சென்ற போது, 52 வயதான அருந்ததி என்ற திருநங்கை தனது வீட்டில், உயரத்தில் உள்ள பொருளை எடுத்துத் தருமாறு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 1098என்ற எண்ணுக்கு பாதிக்கப்பட்ட சிறுவன் தொலைபேசி மூலம் கொடுத்த தகவலின் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு அலுவலர் சவுண்டேஸ்வரி நடத்திய விசாரணை அடிப்படையில் சிறுவனின் தந்தை முருகன் (40) கொடுத்த புகாரின் பேரில் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்து, குமாரபாளையம் 17 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திருநங்கை அருந்ததி (52) என்பவரை திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து, போக்சோ சட்டம் 2012 ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்.

Similar News