விஜயகாந்த் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி

திருவேட்டநல்லூர் கிராமத்தில் விஜயகாந்துக்கு திருவுருவப்படத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்

Update: 2023-12-29 01:52 GMT

விஜயகாந்திற்கு அஞ்சலி

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள திருவேட்டநல்லூர் கிராமத்தில் நேற்று கேப்டன் விஜயகாந்த் இறப்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் கிராம மக்கள் புரட்சிக் கலைஞன் விஜயகாந்த் அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் தேமுதிகவின் திருவேட்டநல்லூர் ஊராட்சி கழகம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் திருமலைசாமி, போத்தியப்பன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, போத்திகண்ணன் உள்பட ஏராளமானூர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News