விருத்தாசலம்: இரண்டு சிறுமிகள் மாயம்

விருத்தாசலம் அருகே இரண்டு சிறுமிகள் மாயமானதை அடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறுமிகளை தேடி வருகின்றனர்.

Update: 2024-03-02 07:00 GMT

வழக்குப் பதிவு 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம், அண்ணா நகரை சேர்ந்த செல்லக்கண்ணு என்பவரின் 15 வயது மகள், செல்வராஜ் என்பவரின் 16 வயது மகள் இருவரும் 8 வது மற்றும் 9 ஆம் வகுப்பு படித்து விட்டு அங்குள்ள கடையில் வேலைக்கு சென்று வந்தனர். கடந்த 27 ஆம் தேதி இருவரும் வேலைக்கு செல்லவில்லை என இருவரின் தாயாரும் கண்டித்தனர். பின்னர் இரவு 8 மணிக்கு இருவரும் வீட்டிலிருந்து மாயமாகினர். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறுமிகளை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News