கைவரிசை காட்டிய இருவர் கைது

விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த தனியார் கல்லூரி பணியாளரிடம், செல்போன், பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-12-28 08:15 GMT

விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த தனியார் கல்லூரி பணியாளரிடம், செல்போன், பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.  

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் பாபு.இவர் தனியார் கல்லூரியில் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 12ஆம் தேதி இரவு வேலை முடித்து வரும் போது மர்ம நபர்கள் இவரை தாக்கி இவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் அடிப்படையில் விகேபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து மேலப்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் வெங்கடேஸ் ஆகிய இருவரை இன்று கைது செய்தனர்.
Tags:    

Similar News