கால்நடை மருத்துவ முகாம்

பிலிச்சிக்குழியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-12-27 11:45 GMT

  பிலிச்சிக்குழியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. 

அரியலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பிலிச்சிக்குழி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று நடைப்பெற்றது. இதனை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் கால்நடைகளுக்கு அளிக்கபடும் சிகிச்சைகள் மற்றும் மருந்துகளின் விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பசுமாடுகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கபட்டது. பின்னர் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் இருந்து கால்நடைகளை பராமரிக்கும் முறைகள் மற்றும் மாட்டு கொட்டகை பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. இதில் கால்நடை உதவி மருத்துவர்கள், உதவியாளர்கள், பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News