ராதாபுரத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

திருநெல்வேலி மாவட்டம்,ராதாபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் நடைபெற்ற கால்நடை முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி, சிகிச்சை, சினை பரிசோதனை, மலடு நீக்கம் உள்ளிட்டவைகளுக்கு மருந்து அளிக்கப்பட்டன

Update: 2024-01-04 07:56 GMT

ராதாபுரத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் உதயத்தூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட விஎன் குளம் அருகில் சிறப்பு கால்நடை மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி மணிகண்டன் தொடங்கி வைத்தார்.இந்த முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி, சிகிச்சை, சினை பரிசோதனை, மலடு நீக்கம் உள்ளிட்டவைகளுக்கு மருந்து செலுத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.
Tags:    

Similar News