தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த விகேபுதூர் கிராம மக்கள்

தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு விகேபுதூர் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Update: 2024-06-30 09:31 GMT
தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த விகேபுதூர் கிராம மக்கள்

தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள விகேபுதூர் பகுதியில் உள்ள ராஜபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழமேடு கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் தற்போது நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாமில் அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளித்தினர். 

  மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் உடனே அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என கூறினார். அதன் பெயரில் உடனடியாக சம்பவ இடத்தை ஆய்வு செய்த ஆட்சியர் வசதிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி குடிநீர் மற்றும் தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்றது. இதனை அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News