சட்டமன்ற தேர்தலில் பலத்தை காட்டுவோம் -  முன்னாள் அமைச்சர்

சட்டமன்ற தேர்தலில் பலத்தை காட்டுவோம் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாகர்கோவிலில் பேட்டியளித்தார்.

Update: 2024-06-12 11:00 GMT

சட்டமன்ற தேர்தலில் பலத்தை காட்டுவோம் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாகர்கோவிலில் பேட்டியளித்தார்.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு முன் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-         நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு  தோல்வி இல்லை. ஒரு கோடி வாக்குகள் பெற்றிருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தல் யார் பிரதர் என்பதை தீர்மானிக்க நடந்த தேர்தலாகும்.  காங்கிரஸ் வெற்றி பெற்று விடும்  என்று, தமிழக வாக்காளர்கள் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்துள்ளார்கள்.    

திமுக மீது சவாரி செய்து காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. பாரதிய ஜனதா அதிமுக கூட்டணி இருந்தால் அதிக  இடங்களில் வெற்றி கிடைத்திருக்கும் என்கிறார்கள். தேர்தல் முடிந்த பின் கருத்துக்கள் சொல்வது அவரவர் கருத்தாகும்.       அதிமுக செல்வாக்கு இழக்கவில்லை. தற்போது அதிமுகவுக்கு மக்கள் ஓய்வு கொடுத்திருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலில் யார் முதலமைச்சர் என்பதற்கான தேர்தலாகும். இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  அதிமுக வெற்றி பெறும் என்று கூறினார்.

Tags:    

Similar News