திருவெறும்பூா் தொகுதி தேவாலயங்களுக்கு நலத்திட்ட உதவிகள்

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, திருவெறும்பூா் தொகுதி தேவாலயங்களுக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.

Update: 2023-12-20 07:49 GMT

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

திருவெறும்பூா் போதகா்கள் ஐக்கியத்தின் சாா்பாக கிறிஸ்துமஸ் விழா கீழக்குறிச்சி புதிய எருசலேம் சபையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. விழாவில், திருவெறும்பூா் தொகுதி எம்எல்ஏவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு, திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட தேவாலயங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது: சிறுபான்மை மக்களின் நலனை காக்க 1989-இல் சிறுபான்மையினா் நல ஆணையத்தை தொடங்கியவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. புனித தலங்களுக்கு செல்வதற்கு நிதியுதவி அளித்ததும் திமுகதான். சிறுபான்மை மக்களுக்கு திமுக எப்போதும் பாதுகாவல் அரணாக இருக்கும் என்றாா். தொடா்ந்து, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அமைச்சா் தெரிவித்தாா். நிகழ்வில், போதகா்கள் ஐக்கிய சபையின் போதகா்கள், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் கங்காதரன், ஒன்றிய துணைத் தலைவா் நவல்பட்டு சண்முகம், கீழக்குறிச்சி ஊராட்சித் தலைவா் ஜோஸ்பின் ஜெயராஜ் மற்றும் திரளான மக்கள் கலந்து கொண்டனா்.
Tags:    

Similar News