சேலம் செவ்வாய்பேட்டையில் சாலையோரம் வாலிபர் பிணம் யார் அவர்?
சேலம் செவ்வாய்பேட்டையில் சாலையோரம் வாலிபர் பிணம் யார் அவர்? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-19 08:56 GMT
கோப்பு படம்
சேலம் செவ்வாய்பேட்டை வெங்கடப்பன் சாலையோர பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். மாநிறம், ஒல்லியான உருவம், இடதுகால் முட்டி, வலது கால் பாதம் பகுதிகளில் காயத்தழும்பு உள்ளது. வெள்ளை நிற பேண்ட் மட்டும் அணிந்திருந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற செவ்வாய்பேட்டை போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.