மொபெட் மீது பைக் மோதிய விபத்தில் பெண் பலி

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே மொபெட் மீது பைக் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2024-01-26 10:32 GMT

பலி

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகில் உள்ள படுக்கப்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி மனைவி பேச்சித்தாய் (53), இவர் மோட்டார் சைக்கிளில் சொக்கன் குடியிருப்பு கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே செல்லும்போது எதிரே வந்த பைக் மோதியதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப் பதிந்து, பைக்கை ஓட்டி வந்த பெரியதாழையைச் சேர்ந்த அந்தோணிப்பா மகன் யாட்லின் (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News