பூவிருந்தவல்லி அருகே பெண்களிடம் நகை பறிப்பு

பூவிருந்தவல்லி அருகே பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-11-01 13:45 GMT

பெண்ணிடம் நகை பறிப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருமழிசையில் கடந்த 26-ந் தேதி மாலை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 11 பவுன் நகையை பறித்து தப்பினர். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது ஈக்காடு பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் மற்றும் அவரது நண்பரான சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News