உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடியில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்

Update: 2023-11-05 10:12 GMT

உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 ஆண்டுக்கு இந்தியாவில் மட்டும் 73 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆறில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பதாக சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் தகவல்; உலக சர்க்கரை நோய் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இந்த மாதம் முழுவதும் உலக சுகாதார நிறுவனம் சர்க்கரை நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்திரவிட்டுள்ளது.

இதை தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள சுந்தரம் அருள்ராஜ் சர்க்கரை நோய் மையத்தில் இன்று உலக சர்க்கரை நோய் தினத்தை யொட்டி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு கொலஸ்ட்ரால் , தைராய்டு , ரத்தத்தில் உள்ள யூரியா அளவு, மூன்று மாத சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகளை இலவசமாக செய்யப்பட்டது, மேலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன விதமான உணவுகளை எடுத்துக் கொள்வது எவ்வாறு ஆரோக்கியமாக வாழ்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் யோகா பயிற்சியும் சர்க்கரை நோயாளிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமில் ஏராளமான சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். ஆண்டுக்கு இந்தியாவில் மட்டும் 73 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆறில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பதாக சர்க்கரை நோய் மருத்துவர் ஆர்த்தி கண்ணன் தெரிவித்தார்.

Tags:    

Similar News