சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது
சிவகங்கை அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்;
Update: 2024-04-23 08:13 GMT
சதீஷ்பாண்டியன்
சிவகங்கை அருகே உள்ள கொட்டகுடி பகுதியில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், நகர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் மேற்கொண்ட சோதனையில் சிவகங்கை பவுன்ட் தெருவைச்சேர்ந்த சதீஷ்பாண்டியன்(32) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்