பரிசலில் சென்று மூன்று வேளை உணவு வழங்கும் இளைஞர்கள்

தூத்துக்குடியில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசலில் சென்று மூன்று வேளை உணவு வழங்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-12-22 10:40 GMT

 தூத்துக்குடியில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசலில் சென்று மூன்று வேளை உணவு வழங்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து பொதுமக்கள் வீட்டு விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்த பகுதிகளில் உணவின்றி தவிக்கும் பொது மக்களுக்கு உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக RVD நிதி நிறுவன இயக்குனர் தயாள கிருஷ்னன் தலைமையிலான 25க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உணவு அளிக்காத பகுதிகளான கதிர்வேல் நகர் புஷ்பா நகர் அந்தோணியார் புரம் ராஜீவ் நகர் முத்தம்மாள் காலனி நேதாஜி நகர் வி எம் எஸ் நகர் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு உணவு சமைத்து பரிசலில் எடுத்துச் சென்று நேரடியாக பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உயிரை பணயம் வைத்து மனிதாபிமானமாக வழங்கி வருகின்றனர் கடந்த நான்கு நாட்களில் மட்டும் சுமார் 15,000 பேருக்கு இந்த உணவு பொட்டலங்களை பரிசலில் சென்று வழங்கி வருகின்றனர்.
Tags:    

Similar News