தரமற்ற பிரசாதம் விவகாரத்தில் ஒப்பந்தம் ரத்து சரியே: உயர்நீதிமன்றம்
By : King 24x7 Desk
Update: 2024-04-20 11:55 GMT
திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் தரமற்ற பிரசாதங்கள் விற்பனை செய்வதாக பக்தர்களின் புகாரையடுத்து ஒப்பந்ததாரர் சீனிவாசனுக்கு வழங்கப்பட்ட அனுமதியை அறநிலையத்துறை ரத்து செய்தது. இந்த நிலையில் தரமற்ற பிரசாதங்களை விற்பனை செய்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை அறநிலையத்துறை ரத்து செய்தது சரியே என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.