திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் ரூ.3.63 கோடி காணிக்கை!!
By : King24x7 Rafi
Update: 2024-05-18 05:28 GMT
Tirupati
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் ரூ.3.63 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை அன்று 71,510 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சுமார் 24 மணி நேரத்துக்கு மேலாக பக்தர்கள் காத்திருந்து இலவச சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் 5 மணி நேரத்துக்கு பிறகு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.