மதுரை மத்திய சிறையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை!!
By : King 24x7 Desk
Update: 2025-01-03 05:52 GMT
madurai central jail
மதுரை மத்திய சிறையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை மத்திய சிறையில் 2016 முதல் 2021 வரை சுமார் ரூ.100 கோடி ஊழல் நடந்ததாக புகார்எழுந்தது. ஊழலில் சிறைத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு எனக்கூறப்பட்ட நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. கைதிகளுக்கு சம்பளம் கொடுத்தது போலவும், ஸ்டேஷனரி பொருட்கள் வாங்கியது போலவும் போலி கணக்கு காட்டி ஊழல் நடைபெற்றுள்ளது.