பக்தர்கள் உடல் முழுவதும் அலகு குத்தி நேர்த்திக் கடன்

அம்மையார்குப்பம் பகுதியில் ஜாத்திரை திருவிழா கோலாகலம். பக்தர்கள் உடல் முழுவதும் அலகு குத்தி நேர்த்திக் கடன்

Update: 2024-09-11 07:32 GMT

பக்தர்கள் உடல் முழுவதும் அலகு குத்தி நேர்த்திக் கடன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் பகுதியில் ஜாத்திரை திருவிழா கோலாகலம்.

பக்தர்கள் உடல் முழுவதும் அலகு குத்தி நேர்த்திக் கடன்




 


ஆர்கே பேட்டை.செப்.11: ஆர்கே பேட்டை மற்றும் அம்மையார்குப்பம் கிராமத்தில் ஜாத்திரை திருவிழா நேற்று கோலாகலமாக துவங்கியது. இவ்விழாவை ஒட்டி கிராம வீதிகள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின் விளககுகளால் ஜொலித்தது. குறிப்பாக ஆர்.கே.பேட்டையில் ஜாத்திரை விழா ஒட்டி உற்சவர் அம்மனை மூன்று டிராக்டர்களில் பக்தர்கள் உடலில் அலகு குத்தி இழுத்து சென்றனர். அதே போல் அம்மையார்குப்பம் பகுதியில், உற்சவர் படவேட்டம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் உடல் முழுவதும் அலகு குத்திக் கொண்டு டிராக்டர், வேன் மற்றும் சரக்கு ஆட்டோ உள்ளிட்ட எட்டு வாகனங்களில் கிராம வீதிகளில் இழுத்து சென்றனர். அப்போது பெண்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கற்பூர தீப ஆராதனை காண்பித்து அம்மனை வழிபட்டனர் ஜாத்திரை விழாவில் இரண்டு ஊராட்சிகள் விழா கோலம் பூண்டுள்ளன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.

Similar News